×

என்எல்சி பாதுகாப்புபடை வீரர் திடீர் சாவு

நெய்வேலி, ஜூலை 23: என்எல்சி தொழில் பாதுகாப்புப்படை வீரர் நோய்க்கொடுமையால் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி வந்தவர் வீரமணி (56). இவர் திண்டுக்கல் அடுத்த பழனி அருகே உள்ள சிவகிரிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் திண்டுக்கல்லில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் நெய்வேலியில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்த என்எல்சி பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வீரமணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது மனைவி கலாவதி கொடுத்த புகாரின்பேரில் டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED வெளிநாட்டில் வேலை பார்த்தவரிடம் ₹2.50 கோடி மோசடி