×

திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலில் 25ம்தேதி ஆடி தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

புதுக்கோட்டை, ஜூலை 23:புதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் கோயிலில் வரும் 25ம்தேதி ஆடி தேரோட்ட திருவிழா துவங்க உள்ளது.புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் புதுக்கோட்டை திருக்கோயில்களை சேர்ந்ததாகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆடி தேரோட்ட திருவிழா வரும் 25ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பல்வேறு வாகனங்கள் அம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது. இதேபோல மண்டகப்படிதாரர்களின் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி காலை 7.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரகதாம்பாளை, தேரில் எழுந்தருள செய்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். தொடர்ந்து இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து 4ம் தேதி ஏகாந்த சேவை மற்றும் கொடியிறக்கத்துடன் பிரகதாம்பாள் கோயில் ஆடி திருவிழா நிறைவுபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ