×

அனைவரும் பாராட்டினர் கல்லூரி மாணவர் மாயம்

ஜெயங்கொண்டம், ஜூலை 23: ஜெயங்கொண்டத்தில் மாயமான கல்லூரி மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அய்யூர் கிராமத்தை சேர்ந்த தனபால் மகன் சத்தியமூர்த்தி (18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூர் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் வீட்டுக்கு சத்தியமூர்த்தி வரவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் தனபால் புகார் செய்தார். சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிந்து மாயமான சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்...