×

ஜூலை 23ல் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

ஊட்டி, ஜூலை 18: முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி ஊட்டியில் நடக்கிறது.  முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, முன்னாள் படை வீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில், மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துக் கொள்கிறார்.   எனவே, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துக் கொண்டு தங்களை கோரிக்கைகளை ெதரிவிக்கலாம். கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இரட்டைப் பிரதிகளாக வழங்க வேண்டும். இவ்வாறு உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு