×

மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் கரடியின் உடல் மீட்பு

மஞ்சூர், ஜூலை 18:மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த ஆண் கரடியின் உடலை வனத்துறையினர் மீட்டனர்.  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதி ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள சன்னிசைடு என்ற இடத்தில் தேயிலை ேதாட்டம் ஒன்றில் கரடி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் குந்தா ரேஞ்சர் சரவணன், வனவர் ரவிக்குமார், வனக்காப்பாளர்கள் ஜெய்கணேஷ், செல்வன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தேயிலை செடிகளுக்கிடையே கிடந்த கரடியின் உடலை மீட்டனர். இதை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் ராஜமுரளி, பொன்கலைவாணி ஆகியோர் வரவழைக்கப்பட்டு கரடியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கரடியான இது வயது மூப்பின் காரணமாக இறந்திருக்க கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு