×

வருவாய்த்துறை சார்பில் உழவர் இ-அடங்கல் செயலி தொடர்பான விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை, ஜூலை18: புதுக்கோட்டையில் வருவாய்துறை சார்பில் நடந்த உழவர் இ அடங்கல் செயலி விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு அது ெதாடர்பான விழிப்பு ணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.வருவாய்த்துறை சார்பில் புதுக்கோட்டை தாலுகாவில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் உழவர் இ-அடங்கல் செயலி தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக முள்ளூர் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு தாசில்தார் பரணி தலைமை வகித்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் உழவர் இ-அடங்கல் செயலி தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.இந்த முகாம் நேற்று (17ம் தேதி) கவிநாடு மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இன்று  (18ம்தேதி) சம்பட்டிவிடுதி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திலும், நாளை (19ம் தேதி) வாகவாசல் சமுதாய கூட்டத்திலும் நடைபெற உள்ளது. இதேபோல தினமும் ஒரு கிராமத்தில் நடைபெற உள்ளது.

Tags :
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...