×

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரத்து வாய்க்கால்களை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை மாவட்டத்தில் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மக்கள் விடுதலையின் மாவட்டக்குழு கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள், அடுத்தகட்ட வேலை திட்டங்கள் பற்றி பேசினார்.கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் முத்துச்சாமி, சரோஜா, சந்திரசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டங்களை முற்றிலும் கைவிட வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை மத்திய அரசு பட்டியலில் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள தைலமரங்கள், சீமைகருவேல மரங்களை அழிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வரத்து வாய்க்கால், தோரண வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரே தேர்தல் முறை திட்டம், ஒரே குடும்ப அட்டை, ஒரே மின் தொகுப்பு திட்டம் போன்ற திட்டங்களை கைவிட வேண்டும். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ