×

புதுகை அடுத்த வடவாளம் கலியுக மெய்ய அய்யனார் கோயிலில் திருக்கல்யாணம்

புதுக்கோட்டை, ஜூலை 18: புதுக்கோட்டை அருகே உள்ள வடவாளத்தில் கலியுக மெய்ய அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 6ம் தேதி ஆனி தேரோட்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வீதிஉலா நடைபெற்று வந்தது. மேலும் விழா நாட்களில் மண்டகப்படிதாரர்களின் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. 7வது நாள் விழாவான கடந்த 12ம் தேதி காலையில் சிறிய தேரோட்டம் நடைபெற்றது.தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 14ம் தேதி இரவு நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு கோயிலுக்கு ஊர்வலமாக வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதையொட்டி கலியுக மெய்ய அய்யனார், பூஷ்கலாம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது.இதில் வடவாளம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...