×

செல்லாண்டிபாளையம் பகுதியில் சாலையோரத்தில் குப்பையை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், ஜூலை 18: சாலையோரத்தில் குப்பை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் அருகே செல்லாண்டிபாளையம் பகுதி முன்பு தாந்தோணி நகரத்தில் இடம் பெற்றிருந்தது. தற்போது கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை. குப்பைகள் குவிந்து வருகிறது. குவியும் குப்பைக்கு அவ்வப்போது தீவைக்கப்படுகிறது. சிலசமயம் துப்புரவு பணியாளர்களே தீவைத்து எரித்துவிடுகின்றனர். இதனால் சாலையில் புகைமூட்டம் எழுகிறது.வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குப்பை எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசுஏற்படுகிறது. குப்பை எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்