×

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை18: தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் சிவப்பு சட்டை, வெள்ளை தொப்பி அணிந்து கோரிக்கை வலியுறுத்தி நூதன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற நூதன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முனிசாமி முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சரவணன் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினார்.
இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர் ஒன்றிப்பு மாநில துணைத்தலைவர் தாமஸ், அரசு பணியாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அலெக்ஸ் டக்ளஸ் ஹோம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை வழங்க வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான போனஸ் ரூ. 7ஆயிரம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் இல்லாத பணியாளர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Tags :
× RELATED திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை;...