×

அனுமதியின்றி மணல் அள்ளிய வாலிபர் கைது

விருத்தாசலம், ஜூலை 18: விருத்தாசலம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏனாதிமேடு மணிமுக்தாற்றில் இருந்து விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஜெயபால்(27) என்பவர் வாகனத்தில் 25 கிலோ எடை கொண்ட 5 மணல் மூட்டைகளை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரியவந்தது. அனுமதி இல்லாமல் எடுத்து வந்ததால் வாகனம் மற்றும் மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஜெயபாலை கைது செய்தனர்.

Tags :
× RELATED மரக்காணம் அருகே பட்டாசு...