×

பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 410 மனுக்கள் குவிந்தன

புதுக்கோட்டை, ஜூலை16: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 410 மனுக்கள் குவிந்தன.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் இருந்து விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் முதல் அமைச்சர் பொதுநிவாரண நிதியின்கீழ் 7 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண நிதியுதவி தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ