×

அரசனூரில் நாளை மின்தடை

சிவகங்கை, ஜூலை 16:  சிவகங்கை அருகே அரசனூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை (ஜூலை 17) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அரசனூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி அரசனூர், இலுப்பக்குடி, திருமாஞ்சோலை, படமாத்தூர், கண்ணாரிருப்பு, கானூர், பச்சேரி, மைக்கேல்பட்டணம், பில்லூர், பெத்தானேந்தல், களத்தூர், ஏனாதி உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு நாளை காலை 9 மணியிலிருந்து மாலை 5மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவலை மின் துணை மின்நிலைய உதவி பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை