×

சிங்காராவில் சிறுத்தை பலி

ஊட்டி, ஜூலை 12:  முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் புலிகள் காப்பக வெளிமண்டம் சிங்காரா வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்மலை காப்புகாடு, மருந்துகுடோன் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.  வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த சிறுத்தையை பார்வையிட்டனர். இதில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. மேலும் இறந்து பல நாட்கள் ஆன நிலையில் அதன் உடல் காய்ந்த நிலையில் காணப்பட்டது. தொடர்ந்து சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு தீயிட்டு எரிக்கப்பட்டது. சிறுத்தை இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை குறைய வாய்ப்பு