×

சுகாதார பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஒரத்தநாடு, ஜூலை 12: ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை தின தேசிய சுகாதார பாதுகாப்பு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சிந்தியா தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பிரேமாவதி, ரோஜா முன்னிலை வகித்தனர். நிழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தொண்டராம்பட்டு மருத்துவ அதிகாரி இந்திரா, ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் ஆகியோர் பரிசு வழங்கினர். உயிர் வேதியியல் துறை தலைவர் மணிமேகலை, சுகாதாரத்துறை அலுவலர்கள் சுரேஷ்குமார், குப்புசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ