×

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

திருமயம், ஜூலை 12: அரிமளம் அருகே செங்கீரை கிராமத்தில் அய்யனார், முன்னோடி கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி கோயிலில் யாக சாலை பூஜைகள் கடந்த 3 நாட்களாக நடந்தது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை கோயில் கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ