×

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

ஒட்டன்சத்திரம், ஜூன் 27: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையத்தை சேர்ந்தவர் மகேஷ் (23). குடும்ப பிரச்னை காரணமாக இவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று ஊருக்கு அருகே கோபால் என்பவருக்கு சொந்தமான மொட்டை கிணற்றில் மகேஷ் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்ததும் கள்ளிமந்தையம் போலீசார், தீயணைப்புத்துறையினர் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்