×

புதுகை செம்பட்டிவிடுதியில் குடிநீர் கலங்கலாக வந்ததால் காலிக்குடங்களுடன் மறியல்

புதுக்கோட்டை, ஜூன் 26: புதுக்கோட்டை செம்பட்டி விடுதி பகுதியில் கலங்கிய குடிநீர் வந்ததால் பெண்கள் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை செம்பட்டிவிடுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினசரி வழங்கப்படும் குடிநீர் கழங்கிய நிலையில் இருந்ததால் அதனை சரிசெய்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் நேற்று பெண்கள் காலிக்குடுங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் சம்பவ இடத்திற்கு சென்ற பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ