×

மின்மோட்டார் மூலம் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு ‘கட்’

திருவில்லிபுத்தூர், ஜூன் 26: திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் மாணிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: போதிய மழையின்றி வறட்சியால் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, திருவில்லிபுத்தூர் நகராட்சியில், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
குடிநீர் இணைப்புகளில் மின்மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உடனடியாக குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபதாரம் விதிக்கப்படும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை