×

பேரூராட்சிகளிலும் நூறு நாள் வேலை வேண்டும் அகில இந்திய விவசாய சங்கம் கோரிக்கை

வத்திராயிருப்பு, ஜூன் 26: நூறு நாள் வேலை தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ.229 கூலி வழங்க வேண்டும். பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலையை விரிவுபடுத்த வேண்டும். நூறு நாள் அடையாள அட்டை த்துள்ளவர்களுக்கு தேர்தலன்று விடுப்புடன் கூலி வழங்க வேண்டும்.கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்தில் ஆணையாளர் நாகராஜனிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சந்திரமோகன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் மணிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை