×

பொன்னமராவதியில் 20 நாளாக சர்வர் பிரச்னையால் ஆதார் எடுக்கும் பணி பாதிப்பு

பொன்னமராவதி, ஜூன் 25: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் எடுக்கும் மையம் 20 நாட்களாக பழுதாகி கிடப்பதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் அரசு பொது இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் கிழக்கு பகுதியில் ஆதார் எடுக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆதார் எடுப்பது, ஆதாரில் பெயர் திருத்தம், செல்போன் பதிவுசெய்தல், புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு தினசரி பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொன்னமராவதி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீண்ட தூரம் வந்தும் பள்ளி விடுமுறை நாட்களில் பிள்ளைகளை கூட்டி வந்து ஆதார் எடுக்க வந்து அலைந்து செல்கின்றனர். ஆனால் ஆதார் சர்வர் பிரச்னை என்றும் பழுதாகியுள்ளது என்றும் கடந்த 20 நாட்களாக அலைகழிக்கப்பட்டு வருகிறது. எனவே ஆதார் எடுக்கும் மையத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சரிசெய்து பொதுமக்களை அலையவிடாமல் ஆதார் கார்டு எடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ