×

ஏடிஎம் கார்டு மூலம் ரூ.2.37 லட்சம் திருட்டு

உசிலம்பட்டி, ஜூன் 21: உசிலம்பட்டி அருகே பி.சேர்வைப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் மலர்விழி(24). எம்.ஏ பட்டதாரி. இவர் கடந்த 15ம் தேதி உசிலம்பட்டி-பேரையூர் சாலையிலுள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றபோது, அருகே குழந்தையுடன் நின்ற 35 வயது வாலிபர் கார்டை திருப்பு போடுங்கள் என வாங்கி அவரிடமிருந்த டம்மி ஏடிஎம் கார்டை மலர்விழியிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.  நேற்று மலர்விழி, பணம் எடுக்க சென்றபோது கணக்கிலிருந்த ரூ.2லட்சத்து 37ஆயிரம் நூதன முறையில் திருடியிருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி மலர்விழி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்து போலீசார் ஏடிஎம் திருடனை தேடி வருகின்றனர்.இன்றைய நிகழ்ச்சிகள்(இனிய வாசகர்களே... இப்பகுதிக்கு அமைப்புகள், சங்கங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிக்கான செய்திகளை,’  இன்றைய நிகழ்ச்சிகள்’ , தினகரன் நாளிதழ், 2/2, மேலூர் மெயின்ரோடு, உத்தங்குடி, மதுரை- 625 107 முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்)


Tags :
× RELATED அரசு பாலிடெக்னிக்கில் மாணவர் சேர்க்கை