×

தீட்டுக்கல் சாலையில் தூய்மை பணி

ஊட்டி, ஜூன் 21: நீலகிரி மாவட்டம் ஊட்டி தீட்டுக்கல் பகுதியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த பி.இ.,வேளாண்மை படித்து வரும் மாணவர்களுக்கு குறுகிய கால நீர் மேலாண்மை பயிற்சி அளி்க்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இம்மாணவர்கள் பங்கேற்ற தூய்மை முகாம் நேற்று நடந்தது. தீட்டுக்கல் முதல் வானிலை ஆராய்ச்சி மையம் வரை சுமார் 1 கி.மீ., தூரம் சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் உள்ளிட்ட அனைத்து வகை குப்பைகளை அகற்றினார்கள். இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் மண் மற்றும் நீர் வள பாதுகாப்பு மைய மூத்த விஞ்ஞானிகள் மணிவண்ணன், கஸ்தூரி திலகம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி