×

அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி செஞ்சி பணம்பாக்கத்தில் 25ம் தேதி வரை ரயில்கள் நிற்காது

சென்னை, ஜூன் 19: அரக்கோணம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 25ம் தேதி வரை செஞ்சி பணம்பாக்கத்தில் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் கடம்பத்தூர் அருகே தண்டவாளப்பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் 25ம் தேதி வரை மின்சார ரயில்கள் செஞ்சி பணம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிற்காது.

அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் இடையே இரவு 10.10 மற்றும் 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் 18,20,22,24 ஆகிய நாட்களில் செஞ்சி பணம்பாக்கத்தில் நிற்காது. கடற்கரை - அரக்கோணம் இடையில் இரவு 1.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்  19,21,23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் செஞ்சி பணம்பாக்கம் நிற்காது.

Tags : route ,Arakonam ,Gingee ,
× RELATED கடும் போக்குவரத்து நெரிசலால் விபத்து:...