திருவொற்றியூர், ஜூன் 19: எண்ணூரில் சுட்டெரிக்கும் வெயிலால் மயங்கி விழுந்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் தங்கம் (60). நேற்று அதே பகுதியில் மார்க்கெட்டுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் கடும் வெப்பத்தினால் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இது சம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.