×

விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டில் பயணிகள் தவிப்பு

திண்டுக்கல், ஜூன் 14: நிலக்கோட்டை அருகே விபத்தில் இறந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. இதனால் பயணிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ஓச்சான் (48). கூலி தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உ.ள்ள தனது குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்தடன் சென்றார். பின்பு அவருடைய மனைவி போதும்பொண்ணு, மகள்கள் ஒச்சம்மாள், திவ்யா ஆகியோர் ஆட்டோவில் வீட்டுக்குச் சென்றனர். இவர்களை அனுப்பிவிட்டு ஒச்சான்மட்டும் சைக்கிளிலில் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் பள்ளப்பட்டி அருகே சென்றார். அப்போது மதுரையில் இருந்து சேலம் சென்ற அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒச்சான் இறந்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனுார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர்.
இதற்கிடையில் ஒச்சானின் மனைவி போதும்பொண்ணு, திண்டுக்கல் சிறப்பு சப் கோர்ட்டில் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து ஒச்சானின் குடும்பத்திற்கு ரூ.11 லட்சத்து 18 ஆயிரத்தை அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒச்சானின் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்ட்டடது.

இதை விசாரித்த நீதிபதி சுதாகர், அரசு போக்குவரத்துக்கழகம் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படி கோர்ட் அமீனாக்களுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று திண்டக்கல் பஸ் நிலையத்தில் நின்றிருந்த மதுரை-சேலம் செல்லும் அரசு பஸ்சை கோர்ட்டு அமீனாக்கள் ஜப்தி செய்தனர். இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்.

பின்பு சாதாரண பஸ்சில் அந்த பயணிகள் ஏற்றி விடப்பட்டனர். இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கட்டது. நாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி மதுரையில் இருந்து பயணம் செய்தோம். தற்போது திடீரென இறக்கிவிடப்பட்டு சாதாரண பஸ்சில் ஏற சொன்னால் நாங்கள் என்ன செய்வது.
நாங்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியதையாவது கொடுங்கள் என கடும் எதிர்ப்ப தெரிவித்தனர். இதைதொடர்ந்து கூடுதல் கட்டணம் திரும்ப வழங்கப்ட்டது.. இதன் காரணமாக திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட்டில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Bus Jubilee Dindigul ,accident ,bus stop passengers ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...