×

விளையாட்டு உபகரணங்கள் இல்லாத சிறுவர் பூங்கா

சிங்கம்புணரி, மே 24: சிங்கம்புணரி மேலூர் சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கு சறுக்குமரம், ஊஞ்சல் , சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இருந்தது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் சிறுவர் பூங்காவில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பூங்காவைச் சுற்றிலும் அலங்கார விளக்குகள் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. தற்போது இச் சிறுவர் பூங்கா உரிய பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் இருப்பது இப்பகுதி சிறுவர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. மேலும் காலை , மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்யும் பொதுமக்கள் மின்விளக்கு இல்லாததால் அச்சத்துடன் வர வேண்டிய நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக மின் விளக்கு வசதி செய்து சேதமடைந்த உபகரணங்களை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Children ,park ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...