×

கடைசி மூச்சு வரை அரசியலில் இருந்து மக்கள் பிரச்னைகளுக்கு போராடுவேன் நடிகர் பவன் கல்யாண் உருக்கம்

திருமலை, மே 25: கடைசி மூச்சு வரை அரசியலில் இருந்து மக்கள் பிரச்னைகளுக்கு தொடர்ந்து போராடுவேன் என்று நடிகரும் ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் உருக்கமாக பேசினார். ஆந்திராவில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தலில், 150 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 24 இடங்களிலும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது.

இதுகுறித்து நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் விஜயவாடாவில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:

சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஜனசேனா கட்சியை 2014ம் ஆண்டு தொடங்கினேன். கட்சியைத் தொடங்கும் போதே 15 ஆண்டுகால தொலைதூர பார்வையுடன் தொடங்கினேன். எனவே வெற்றி, தோல்வி அனைத்தையும் எதிர்கொள்ளும் மனநிலையுடன் உள்ளேன். 2 இடங்களில் நான் தோல்வி அடைந்திருந்தாலும், எனது கட்சி வெற்றி பெறாவிட்டாலும் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட ஒவ்வொரு தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி. அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கும், 2வது முறையாக பிரதமர் பதவி ஏற்கவுள்ள மோடிக்கும் வாழ்த்துக்கள். யாருடைய உதவியும் அவசியம் இல்லாமல் முழு மெஜாரிட்டியுடன் பாஜ வெற்றி பெற்று இருந்தாலும், மோடி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தலில் பணம், மது ஆகியவை வழங்காமல் புதிய விதத்தில் நாங்கள் தேர்தலை எதிர்கொண்டோம். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம். எனவே எனது கடைசி மூச்சு உள்ள வரை, நான் கூறியபடி தொடர்ந்து அரசியலிலேயே இருப்பேன். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bhavan Kalyan ,
× RELATED பவண் கல்யாண் ரசிகரின் திருமண...