×

டாஸ்மாக் கடைக்கு நாளை விடுமுறை

ஊட்டி, மே 22: வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளை (23ம் தேதி) நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை மீறி மதுபானம் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனை கடைகள் திறந்திருப்பதாக பொதுமக்களுக்கு தகவல் தெரிந்தால் குன்னூர் எடப்பள்ளி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் - 0423-2234211, கூடுதல் எஸ்.பி., 0423-2223802, ஆயம் உதவி ஆணையர் அலுவலகம் - 0423-2443693 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :
× RELATED தொட்டபெட்டா வனத்தில் காட்டு தீ