×

2 பேர் விஷம் குடித்து தற்கொலை

ஈரோடு, மே 22: ஈரோடு நசியனூர் ராயபாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(60). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 19ம் தேதி இரவு தெய்வசிகாமணி கதிரம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் விஷம் மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது குடும்பத்தினர் தெய்வசிகாமணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.  அதேபோல் சத்தியமங்கலம் இக்கரை தத்தப்பள்ளி பழையூர் பகுதியை சேர்ந்த மவுலிசங்கர்(29),என்ற விவசாயி. களைக்கொல்லி மருந்து சாப்பிட்டு  நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை