×

விளையாட்டுப் பயிற்சி

சோழவந்தான், மே 22: சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கால்பந்து, கபடி, கூடைப்பந்து விளையாட்டுக்கான இலவச கோடை காலப்பயிற்சி வகுப்பு 2 நாட்களாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நடந்த பயிற்சி வகுப்பில் முன்னாள் இந்திய கபடி அணி பயிற்சியாளர் பாஸ்கரன், கூடைப்பந்து பயிற்சியாளர் வெண்மணி, கால்பந்து பயிற்சியாளர் முத்துபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு பயிற்சியளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெ.ஜெ ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் முரளிசோழர் மற்றும் ரத்தினவேல்பாண்டியன், ராஜ்குமார், சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags :
× RELATED அதிக பாரத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்