×

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

கந்தர்வகோட்டை, மே 22:  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கோமாபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி பிரேமா(40). இவர் நேற்று முன்தினம் தனது சகோதரர் மகேஷ்வரனுடன் பைக்கில் கந்தர்வகோட்டைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வடுகப்பட்டி பிரிவு பாலம் அருகே வந்தபோது, பைக்கிலிருந்து பிரேமா தவறி விழுந்து படுகாயமடைந்தார். கந்தர்வகோட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமா இறந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ