×

நாமக்கல் அருகே குளிக்க சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி பலி

நாமக்கல், மே 21: நாமக்கல் அருகே குளிக்க சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே சின்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் நாகராஜ்(15). 10ம் வகுப்பு அரசு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளான். இவனது மாமா மகன் ஊட்டியைச் சேர்ந்த பிரவின்(9). இவர்கள் இருவரும் நாமக்கல் கொசவம்பட்டியில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவுக்காக தாத்தா சந்திரசேகரன் வீட்டிற்கு வந்திருந்தனர். நேற்று நாகராஜ், பிரவின் ஆகியோர் சந்திரசேகரனின் வீட்டுக்க அருகே உள்ள பொது கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர்.


சமீபத்தில் பெய்த கோடை மழையால் கிணற்றில் அதிகளவில் தண்ணீர் இருந்துள்ளது. இதனால், எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக்கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து பிரவினை உயிருடன் மீட்டனர். ஆனால், நாகராஜ் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் நாகராஜ் உடலை மீட்டனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : student ,bath ,Namakkal ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...