×

மாவட்டம் முழுவதும் 23ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

நாமக்கல், மே 21: வாக்கு எண்ணிக்கை தினமான வரும் 23ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளை மூடவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் மூடவேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்களை கட்டாயம் மூடவேண்டும். அரசின் உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்து வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Tags : bungalows ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...