×

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தில் மனு

கரூர், மே 21: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் மாவட்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்  எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 13ம்தேதி அன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடந்த பிரஸ்மீட்டில், கமலஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவிபிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் என்பதை மறந்து பேசியுள்ளார். கமலஹாசன் கூறிய கருத்துக்கு மறுப்போ, எதிர்ப்போ இருந்தால் அதற்கு ஜனநாயக அடிப்படையில் கருத்து தெரிவிக்க சட்டப்படி உரிமையுள்ளது.  அதை விட்டு விட்டு தமிழக அரசின் அமைச்சர் ஒருவர், கமலஹாசனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டித்தக்கது. மேலும், வேலாயுதம்பாளையத்தில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது, நடந்த கல்வீச்சு சம்பவமும் சந்தேகத்தை ஏற்படுத்தும்படி உள்ளது. எனவே, எஸ்பி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Rajendra Balaji ,servants ,SSP ,
× RELATED மக்களவை தேர்தல்: ஐஸ் தயாரிப்பு முதல்...