×

வாகனம் மோதி வாலிபர் பலி

வேப்பூர், மே 15: திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் சிவமடம் அருகே வாலிபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சாலையின் நடுவே விழுந்தார். தொடர்ந்து வந்த வாகனங்கள் நிற்காமல் அவர் மீது மோதியதால், உடல் நசுங்கி அதே இடத்தில் இறந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வேப்பூர் போலீசார், அங்கு கிடைத்த சிம்கார்டு மூலமாக தொடர்பு கொண்டு விசாரித்த போது, விருத்தாசலம் அடுத்த எடசித்தூரை சேர்ந்த ஆனந்த்(30) என்பது தெரியவந்தது. வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்து பின்னர் சம்பவத்தன்று இரவு வேப்பூருக்கு நடந்து சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags :
× RELATED மரக்காணம் அருகே பட்டாசு...