×

ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தஆடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, ஏப்.26:  புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  பணி கொண்டான் விடுதி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (36). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் சுமார் 600அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார். இதில் சுமார் இருபது அடி ஆழத்தில் பைப் இறக்கி  கொண்டிருந்தபோது அருகில் பைப்பை சுற்றி முழுவதும் ஜல்லி கற்கள் செலுத்தி கொண்டிருந்த போது திடீர் என்று அந்த இடத்தில் மேயந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஓடி வந்து  ஆழ்குழாய் கிணற்றில் விழுந்தது. உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர் உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சிங்கமுத்து தலைமையில் குழிக்கு அருகில் ஆழம் தோண்டி ஆட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதனால் தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பொது மக்கள் விவசாயி அசோக் ஆகியோர் பாராட்டினர்.


Tags :
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா