×

இடப்பிரச்னை தகராறில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 2 பேர் கைது

இலுப்பூர், ஏப்.26: இலுப்பூர் நவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (27). இவருக்கும், இவரின் வீட்டின் அருகே உள்ள கருப்பையா குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட காலமாக இடப்பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே சதீஸ்குமார் நின்று கொண்டிருந்தபோது  கருப்பையா குடும்பத்தினர் திட்டியுள்ளனர். ஏன் திட்டுகிறீர்கள் என்று சதீஸ்குமார் கேட்டுள்ளார். இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சதீஸ்குமாரை அரிவாளால் தாக்கியதில் லேசான காயம்  ஏற்பட்டது. அவருக்கு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சதீஸ்குமார் கொடுத்த புகாரின்பேரில் கருப்பையா மகன் இளையராஜா (20), ஆண்டிக்கண்ணு (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ