×

போதையில் போலீசாரை மிரட்டியவர் கைது

கோவை, ஏப்.25: குடிபோதையில் போலீஸ் நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.  கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் போலீஸ் நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக மர்ம மனிதன் ஒருவன் போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். அப்போது அவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கு மற்றும் துடியலூர் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக போலீஸ் நடவடிக்கையை விமர்சித்து தரக்குறைவாக பேசி வந்துள்ளார். பின்னர் போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.  இது தொடர்பாக போலீசார் மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து அந்த நபரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரை மிரட்டியவர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த வேல்குமார்(40) என தெரியவந்தது. அவரை சாயிபாபா காலனி போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் குடிபோதையில் அவ்வாறு பேசிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் வேதனை