×

பொன்னமராவதி அருகே ஆடு திருடியவர் கைது

பொன்னமராவதி, ஏப்.25: பொன்னமராவதி  அருகே ஆடு திருடிவரை போலீசார் கைது செய்து ஆடுகளை மீட்டனர். பொன்னமராவதி அருகே உள்ள  காரையூர் மறவர்குடியிருப்பைச் சேர்ந்த ராமசாமியின் வீட்டின் அருகே கட்டி வைத்திருந்த ஒரு வௌ்ளாடு, அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் என்பவது இரண்டு வௌ்ளாடுகளை நேற்று முன்தினம் (23ம் தேதி) நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். ஆடுகளை பறிகொடுத்தவர்கள் காரையூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் ஆடு திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அன்னவாசல் பக்கம் உள்ள  விளாம்பட்டி வௌ்ளைச்சாமி மகன் ரமேஷ் என்பரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் மூன்று ஆடுகளை திருடியதை ரமேஷ் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவரிடமிருந்த ஆடுகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்து, ஆடுகள் திருடிய ராமேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Ponnamaravathi ,
× RELATED 2027ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழித்து...