×

மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை துவக்கம்

காரைக்குடி, ஏப்.25: காரைக்குடி அருகே லேனாவிளக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2019-2020ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவக்கவிழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜெயபாரதன் செல்லையா தலைமை வகித்தார். துணைத்தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் முன்னிலை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஜெய்சன் மாணவர் சேர்க்கையை துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் பேசுகையில், இக்கல்லூரி அண்ணா பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட இயக்க சான்றிதல் பெற்றுள்ளது. ஐ.ஐ.டி.யில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் மாணவர்கள் முதல் இடத்தை பெற்றுள்ளனர். அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகம், தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில் தொடர்ந்து சாம்பியன் ஷிப் பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் இக்கல்லூரி மாணவர்கள் சிறந்த இடம் பெற்றுள்ளனர் என்றார்.

Tags : Mountson ,College of Engineering ,
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு