×

விபத்தில் காயமடைந்தவர் பலி

ராமநாதபுரம், ஏப்.25: ராமநாதபுரம் வெளிப்பட்டணத்தை சேர்ந்தவர் குதரத்துல்லா50. நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று விட்டு வந்த போது கேணிக்கரை வழியாக வந்த மணல் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கேணிக்கரை போலீசார், லாரி டிரைவர் ராமநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சோர்ந்த தியாகராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...