×

இரண்டு குடம் தண்ணீர் கேட்டு காலிக்குடத்துடன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா

புதுக்கோட்டை,ஏப்.24: புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு. இவர் வீட்டிற்கு தண்ணீர் வில்லை என்று கூறி நேற்று தன்னுடைய இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு காலிக்குடங்களுடன் புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்திற்கு வந்தார். என் வீட்டிற்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வருவில்லை. இதனால் நகராட்சி நிர்வாகம் விரைந்து இரண்டு குடம் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தை கைவிட்டு சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...