×

திருமயம் அருகே ரயிலில் அடிபட்டு பெண் பலி

திருமயம், ஏப்.24: திருமயம் அருகே அடையாளம் தெரியாத பெண் ரயிலில் அடிபட்டு பலியானார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் பகுதி ரயில்வே பாதையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது தெரியாத நிலையில், 5 அடி உயரம், கத்தரிப்பு கலர் சேலை, கறுப்பு நிற பிலவுஸ் அணிந்திருந்தாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி காரைக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Wayanad ,
× RELATED ராகுல்காந்தி மீதுள்ள அச்சம்...