×

காவிரியாற்றில் ஆழம் நிறைந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

நாமக்கல், ஏப்.24: கொமதேக பொதுசெயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் காவிரியாற்றில் குளிக்க சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. காவிரியாற்றில் ஆழம் நிறைந்த பகுதியில் குளித்த சிறுவர்கள் சுழலில் சிக்கியதால், அவர்களை காப்பாற்ற சென்ற பெற்றோரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கரூரில் உள்ள டிஎன்பிஎல் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுப்பதற்காக, பொத்தனூர் காவிரியாற்றில் பல அடி ஆழம் கொண்ட பள்ளங்கள அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் புதியதாக குளிக்க செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கும் ஆற்றில் தோண்டப்பட்டுள்ள பள்ளம் இருக்கும் பகுதி தெரியாமல் போய் விடுகிறது. இதனால், ஆபத்தை உணராமல், ஆழம் நிறைந்த பகுதியில் குளிக்க செல்லும் போது, எதிர்பாராத விதமாக துயர சம்பவங்கள் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, காவிரியாற்றில் ஆழம் நிறைந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அபாய எச்சரிக்கை பலகைகளை உடனடியாக வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியாற்றில் நீரில் மூழ்கி உரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொமதேக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : areas ,board ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...