×

மஞ்சூர் பகுதியில் நாவல் பழ சீசன்

மஞ்சூர், ஏப்.24: மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் நாவல் பழ சீசன் களை கட்டியுள்ளது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தேயிலை விவசாயத்துடன் மலை காய்கறிகள் விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர ஊடுபயிராக காப்பி விவசாயத்திலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை மற்றும் தோட்டங்களில் ப்ளம்ஸ், கொய்யா, பீச், விக்கி உள்பட பல வகையான பழ மரங்களும் நடவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சீசனுக்கு தகுந்தார்போல் மரங்களில் பழங்கள் காய்க்கின்றன. இந்நிலையில் தற்போது சுற்றுபுறங்களில் நாவல் பழ சீசன் துவங்கியுள்ளது. தேயிலை ேதாட்டங்கள், வனப்பகுதிகள் மட்டுமின்றி சாலையோரங்களில் பெருமளவு மரங்களில் நாவல் பழங்கள் காய்த்து கொத்து, கொத்தாக காணப்படுகிறது. மருத்துவ குணம் கொண்டதாக கூறப்படும் இந்த பழங்களை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ஆர்வத்துடன் பறித்து செல்கின்றனர்.

Tags : Manchur ,
× RELATED மஞ்சூரில் ரேஷன் கடை ஊழியர் வீட்டில்...