×

க.பரமத்தி அருகே வேன்- கார் மோதல் 10 பேர் காயம்

கரூர், ஏப். 24:  க.பரமத்தி அருகே வேனுடன் கார் மோதிய விபத்தில் வேனில் சென்ற 10பேர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் கோவை சென்றனர். வேனை இதே பகுதியை சேர்ந்த கோபால்(39) என்பவர் ஓட்டிச் சென்றார்.இவர்கள் சென்ற வேன், கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள வானவிழி பஸ் ஸ்டாப் அருகே சென்ற போது, பரமத்தி பகுதியில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று, வேன் மீது லேசாக உரசியது. இதனால், அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர், வேனை, இடதுபக்கம் திருப்பிய போது வேன் சாலையில் இருந்து விலகி, மண் தரையில் சரிந்து நின்றது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த, இலுப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ராஜகுமாரி, முத்தம்மாள், வெங்கடாசலம், எல்லம்மாள், பழனியம்மாள் உட்பட 10 பேர் காயமடைந்து கரூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து குறித்து காரை ஓட்டி வந்த நபர் மீது க.பரமத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Tags : car bomb ,
× RELATED முதல்வர் பிரசாரம் செய்யும் இடம் அருகே...