×

கழிவுநீர் செல்வதற்கு முறையான சாக்கடை கால்வாய் அமைக்க

திருச்செங்கோடு, ஏப்.23: திருச்செங்கோடு தாலுகா, சின்னஎலச்சிபாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு முறையான சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால், கழிவிநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இந்த கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே, இப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewage canal ,
× RELATED எம்.எஸ்.ஆர். சர்க்கிள் வளைவில் ஆபத்தான...