×

3 கிராம மக்கள் கொன்னையூர் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

பொன்னமராவதி, ஏப்.23: பொன்னமராவதி அருகே உள்ள மூன்று கிராம மக்கள் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம், கேசராபட்டி, புதுப்பட்டி ஆகிய மூன்று ஊரைச் சேர்ந்த பெண்கள் சித்திரை மாத விழாவையொட்டி பொங்கல் கூடை எடுத்தும், மேளதாளத்துடன் ஊர்வலமாக சுவாமி ஆடியும் 7 கி.மீ தூரம் கால்நடையாகச் சென்று கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வந்தனர். இதில்  ஒருவர் தனது உடலில் சைடு சிலா அலகு குத்திச்சென்று வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Kanniyoor Amman ,
× RELATED பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ