×

சிறுமிக்கு தொல்லை போக்சோவில் வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி, ஏப்.23: கும்மிடிப்பூண்டி அடுத்த எஸ்.ஆர்.கண்டியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 16ம் தேதி காலை வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையில் அந்த சிறுமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், விசாரணையில், ஜி.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்த சின்னராசு (22). என்பவர், ஆசைவார்த்தை கூறி அந்த சிறுமியை  கடத்திசென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சின்னராசுவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர், கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...